Home Blog Page 339

BookMyShow – வில் வேலை செய்ய விருப்பமா? இதோ பாருங்க!

0

BookMyShow ஆட்சேர்ப்பு 2024 (தனியார் வேலை புதுப்பிப்பு) பல்வேறு விளம்பர செயல்பாட்டு நிர்வாகி மற்றும் கிராஃபிக் டிசைன் எக்ஸிகியூட்டிவ் (வீட்டில் இருந்து வேலை/அலுவலகம் – ஹைப்ரிட்/ஆன்சைட்) பதவிகளுக்கானது.

படிக்கக்கூடிய மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் (17-01-2024) அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். BookMyShow ஆட்சேர்ப்பு காலியிடங்கள், சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை, கல்வித் தகுதிகள், முடிவுகள், வயது வரம்பு மற்றும் இந்தப் பதவியைப் பற்றிய அனைத்து விவரங்கள்/ தகவல்கள் கீழே உள்ள விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

BookMyShow ஆட்சேர்ப்பு 2024க்கான வேலை இடம் –

விளம்பர செயல்பாடுகள் எக்சிகியூட்டிவ் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள், ஏனெனில் இது ஹைபிரிட் வேலை  மற்றும் அலுவலக இடம் மும்பையாக இருக்கும். கிராஃபிக் டிசைன் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு, விண்ணப்பதாரர்களுக்கான வேலை இடமும் மும்பையாக இருக்க வேண்டும்.

 

காலியிடங்களின் எண்ணிக்கை –

பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

 

காலியிடங்களின் பெயர் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கை –

1. விளம்பர செயல்பாடுகள் நிர்வாகி

2. கிராஃபிக் டிசைன் எக்ஸிகியூட்டிவ்.

 

இணையதள பேனர்கள், ஆப்ஸ் விளம்பரங்கள், சமூக ஊடக இடுகைகள், கிஃப்ட் கார்டுகள், இடம் வரைபடங்கள் போன்றவற்றில் இந்த படைப்புகளின்  கிராபிக்ஸ் உருவாக்கவும் மற்றும்

மார்க்கெட்டிங் மேலாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,.

 

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் – விளம்பரச் செயல்பாடுகள் எக்சிகியூட்டிவ் பதவிக்கு, ரூ. 31,500 மற்றும் கிராஃபிக் டிசைன் எக்சிகியூட்டிவ் பதவிக்கு, செலுத்த வேண்டிய சம்பளம் ரூ.24,600 ஆக இருக்கும்.

 

வயது – இந்த ஆட்சேர்ப்புக்கு, விண்ணப்பதாரர் வயது குறைந்தது 18 ஆண்டுகள் இருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்புக்கு உச்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 

கல்வித் தகுதிகள் – இந்தப் பதவிக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

விளம்பரச் செயல்பாடுகள் நிர்வாகி – விளம்பரச் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் கொண்ட எந்தவொரு துறையிலும் பட்டதாரி பட்டம்}

கிராஃபிக் டிசைன் எக்ஸிகியூட்டிவ் – {12வது தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு.

 

தேர்வு முறை – BookMyShow ஆட்சேர்ப்புக்கு, வேட்பாளர் பட்டியல்/மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் தொலைபேசி அல்லது கள நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு வேட்பாளர் அவர்கள் விரும்பிய தகுதிக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டால், அவர்/அவள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படுவார்.

 

https://www.linkedin.com/jobs/view/3778508885/?eBP=NON_CHARGEABLE_CHANNEL&refId=wcn%2BfIUIqJ4hzI2f7YsIHw%3D%3D&trackingId=MOzKdoN3OYoY7HO38Jz2cg%3D%3D&trk=flagship3_search_srp_jobs

 

https://www.linkedin.com/jobs/view/3777942199/?eBP=NON_CHARGEABLE_CHANNEL&refId=wcn%2BfIUIqJ4hzI2f7YsIHw%3D%3D&trackingId=TCr7%2BfEl4Zad0Dhu575FSQ%3D%3D&trk=flagship3_search_srp_jobs

லிங்க் கிளிக் செய்து மேலும் தகவல்களை பெற்று கொள்ளவும்.

எப்பேர்பட்ட இருமலுக்கும் இது ஒன்னு போதும்!

0

மழைக்காலம் இது இந்த மழைக்காலத்தில் சளி இருமல் காய்ச்சல் என பரவி வருகிறது. இதற்கு மருத்துவ வருடம் சென்று பணத்தை செலவழிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இருமலை நிறுத்தலாம்.

 

நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் முந்தைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் அவரது மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் நாம் விட்டுவிட்டு ஆங்கில மருத்துவர்களிடம் சென்று இல்லாத நோய்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

 

மழைக்காலங்களில் வரும் சளி மற்றும் இருமலை போக்க நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி நம்மை நாம் சரி செய்து கொள்ளலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவு பார்க்கப் போகின்றோம்.

 

தேவையான பொருட்கள்:

 

சின்ன வெங்காயம்

துளசி இலை

கற்பூரவள்ளி இலை

உப்பு

மிளகுத்தூள்

எலுமிச்சை சாறு

 

செய்முறை:

 

வெங்காயம் துளசி இலை கற்பூரவள்ளி இலை உப்பு ஆகிய இவை அனைத்தையும் எடுத்து நன்றாக தட்டி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

 

இந்த சான்றுடன் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்த குடித்து வரும் பொழுது சளி முற்றிலும் வெளியே வந்து இருமல் நின்று விடும்.

12000 பேர் வேலை இழப்பு!- சுந்தர் பிச்சையின் பதில் என்ன?

0

 

கடந்த 12ம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஒரு கூட்டம்  நடைபெற்றது.  அந்த மீட்டிங்கில் சுமார் 12,000 பணியாளர்களை கூகுள் நிறுவனம் வேலை விட்டு நீக்க போவதாக எடுத்த முடிவுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு அளித்துள்ளார்.

 

மேலும் அந்த சந்திப்பில் இந்தப் பணி நீக்கங்களை இன்னும் மிகவும் சரியாக நிர்வகித்திருக்கக்கூடும் என்ற நிலையில், மேலும் பல விவாதங்கள் பல சிந்தனைகளுக்கு அப்புறமே இந்த மன வருத்தம் தரக்கூடிய முடிவு எடுக்கப்பட்டது என்று சொல்லி உள்ளார்.

 

கூட்டத்தில், ஒரு ஊழியர், , வளர்ச்சி மற்றும் மன உறுதியின் அடிப்படையில் இந்த முடிவு நிறுவனத்தை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்கிறீர்கள் என கேட்க,  அதற்கு சுந்தர் பிச்சை, “மன உறுதியின் மீது தெளிவான பெரிய தாக்கம்” என்றார்.

 

மேலும், பிச்சை கூறினார், ‘இது கூகுள்ஜிஸ்ட்டில் உள்ள கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களில் இது பிரதிபலிக்கிறது என்றும். எந்த நிறுவனமும் கடந்து செல்வது கடினம் என்றும், கூகுளில், 25 வருடங்களில் இதுபோன்ற ஒரு தருணத்தை நாங்கள் பெற்றதில்லை.’  என்றும் கூறினார்.

 

மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப 12,000 வேலை பணி நீக்க   முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்கால வளர்ச்சிக்கு தன்னை மேலும் அமைப்பை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

‘நாங்கள் செயல்படவில்லை என்றால், அது ஒரு மோசமான முடிவாக இருந்திருக்க கூடும் என்பது தெரிய வந்தது.

 

இந்த முடிவு மிகவும் கடினமான முடிவாகவே இருந்தது. மேலும் அத்தனை பேருக்கும் உடனடியாக வேலை இழந்த விசயத்தை தெரிவிக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் இதனை கையாண்டு இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

கல்யாணத்தை பற்றி கேட்ட ரசிகர்! சமந்தாவின் அதிரடி பதில்!

0

தமிழ் திரையுலகிலேயே மிகவும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மிகவும் அழகாக நடித்த பார்ப்பவர் நடிகை சமந்தா. இப்பொழுது அவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். நயன்தாராவை போலவே female லீட் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது சம்பந்தமான சப்ஜெக்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

#image_title
#image_title

அவ்வப்பொழுது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இன்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டு பதில் அளித்துள்ளார்..

 

1. Sunday Thoughts here! என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கேள்வி கேட்க அதற்கு சமந்தாவும் பதில் அளித்துள்ளார்.

2. எப்படி லைஃப் இருக்கிறது? நாய்க்குட்டிகள் எப்படி இருக்கின்றன? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க. அதற்கு ஒரு போட்டோவை வெளியிட்டு நாம் அவர்களுக்கு உணவை தருகிறோம்! அவர்கள் மீது அன்பு காட்டுகிறோம்! ஆனால் அவர்கள் வேறொருவர் மீது அன்பு காட்டுகிறார்கள் என்று சொல்லி, அவரது அம்மா கதவிற்கு பின்னால் இருக்கிறார்கள் அதை மூன்று பேரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்பதை உணர்த்தும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

3. வருகின்ற ஆண்டில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறீர்கள் என கேட்க, நல்ல உடல் பாதுகாப்பு குட் ஹெல்த் என்ற பதிலை தெரிவித்துள்ளார் .

4. கடவுளை நம்புகிறீர்களா என்று பதிலுக்கு ஆம் என்ற பதிலை அறிவித்துள்ளார்.

5. உங்களது மொபைல் போனில் லாக் ஸ்கிரீன் என்ன என்ற பதிலுக்கு அவர் ஒரு போட்டோவை பதிவு இட்டுள்ளார். அதில் ஒரு கடவுளின் படம் உள்ளது.

6. மறுபடியும் திருமணம் செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க ” புள்ளியலின்படி இது ஒரு மோசமான முதலீடாக கருதப்படுகிறது, என்று சொல்லி பதிவிட்டுள்ளார். மேலும் முதல் கல்யாணம் 50 சதவீதம் விவாகரத்தில் போய் முடியும் என்றும், இரண்டாவது கல்யாணம் 67 முதல் 73 சதவீதம் விவாகரத்தில் போய் முடியும் என்றும் போஸ்ட் போட்டுள்ளார்.

8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! Office assistant வேலை! 62000 வரை சம்பளம்!

0

தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை சரி பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

பெயர்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலைவாய்ப்பு வகை: வழக்கமான அடிப்படையில்.

மொத்த காலியிடங்கள்: 04 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

இடுகையிடும் இடம்: சென்னை

தொடக்க நாள்: 16.12.2023

கடைசி தேதி: 02.01.2024விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://artandculture.tn.gov.in

கல்வி தகுதி:

1. சுருக்கெழுத்து தட்டச்சர் – ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் உயர் தரத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

2. தட்டச்சர் – ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு ஆகியவற்றில் உயர் தரத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

3. இளநிலை உதவியாளர் – 10வது தேர்ச்சி

4. அலுவலக உதவியாளர் – 8வது தேர்ச்சி

வயது:

1. சுருக்கெழுத்து தட்டச்சர் – 18 முதல் 32 வயது வரை

2. தட்டச்சர் – 18 முதல் 32 வயது வரை

3. இளநிலை உதவியாளர் – 18 முதல் 32 வயது வரை

4. அலுவலக உதவியாளர் – 18 முதல் 32 வரை

சம்பள விவரம்:

1. சுருக்கெழுத்து தட்டச்சர் – நிலை-8 ரூ.19500-62000/-

2. தட்டச்சர் – நிலை-8 ரூ.19500-62000/-

3. இளநிலை உதவியாளர் – நிலை-8 ரூ.19500-62000/-

4. அலுவலக உதவியாளர் – நிலை-8 ரூ.19500-62000/-

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி 16.12.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 02.01.2024.

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

https://www.tamilanguide.in/wp-content/uploads/2023/12/Tamil-Nadu-Eyal-Isai-Nataka-Manram-Official-Notification-PDF.pdf

 

மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று! மருத்துவ கவுன்சில் பகீர்!

0

இன்றைய நிலையில் இந்தியாவில் மீண்டும் 335 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1701 பேராக உயர்ந்துள்ளது என மத்திய பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிட்-19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடி (4,50,04,816) மற்றும் இறப்பு எண்ணிக்கை 5,33,316 ஆக உள்ளது, காலை 8 மணிக்கு புதிய தகவல் வந்தது.

 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,69,799 ஆக அதிகரித்துள்ளது. தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

 

அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

என்னதான் புதிய கேசுகள் உருவாகிக்கொண்டே இருந்தாலும் இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது. கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி உள்ளதால் பயத்தை அளிக்கிறது. மீண்டும் இது சபரிமலை சீசன் என்பதால் மக்கள் கூடும் இடத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது இதனால் அரசு முன் எச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

 

மேலும் இது பொங்கல் மற்றும் நியூ இயர் தொடர்ந்த வருவதால் மக்கள் தங்களது இருப்பிடத்திற்குச் சென்று வருவார்கள் அப்பொழுது மேலும் தோற்றுப் பரவும் அபாயம் ஏற்படும் அதனால் முன்னரே அரசு செயல்பட வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இடைவிடாத கொட்டும் மழை! மிதக்கும் குடியிருப்புகள்?

0

தென் மாவட்டங்களில் மழை இடைவிடாத பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்று முதல் மழை நிற்காமல் பெய்து வருகின்றது. அதனால் முழங்கால் அளவிற்கு தண்ணீர் பெருகி மிதக்கும் குடியிருப்புகள் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி நிலவுகின்றது. இதன் காரணமாக நேற்று தென்தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.

 

அதேபோல் கனமழை தென்காசி தூத்துக்குடி குமரி மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுவையில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளார். மேலும் இடி மற்றும் மின்னல் பலத்த காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தூத்துக்குடியில் மற்றும் தென்காசியில் அதிகமாக மழை பெய்வதால் நீர் தேங்கி மக்கள் வெளிவராத நிலமை ஏற்பட்டுள்ளது. நாளை தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மற்றும் மின்னல் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

தாமிரபரணியில் இருந்து 3000 கன அடி நீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவித்துள்ளது. அதேபோல் குற்றாலங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து வருவதால் இப்போதைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடியிலும் கன்னியாகுமரியிலும் இடைவிடாத பெய்யும் மழையினால் குடியிருப்புகளில் நீர் புகுந்த நீர் தேங்கி மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். மேலும் மழை நாளையும் தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Bank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?

0

55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரயன்பூர் என்ற கிராமத்தில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் இடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடு முழுவதும் ஏகப்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களின் மீது கடன்களை வாங்கி உள்ளனர். மழை சரியாக பெய்யாத காலங்களில்,விவசாயம் சரியாக நடைபெறாத காலங்களில் கடன் கட்ட முடியாத நிலை வரும் பொழுது இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் 55 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் சோகத்தையே ஏற்படுத்தி உள்ளது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்த போலீசார் கடன் சுமை தாங்க முடியாமல் தான் ,அதேபோல் விவசாயம் சரியாக நடைபெறாமல் இருந்ததால் மனம் உடைந்து போன விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தற்கொலை சம்பந்தமான எந்த ஒரு தடயமும் அங்கு இல்லாததால் இது இயற்கையான மரணம் என்று போலீசார் சொல்லினர்.

 

ஆனால் அந்த 55 வயது மதிக்கத்தக்க விவசாயின் மகன், தங்களுக்கு 9 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மீது அருகில் உள்ள பேங்கில் Zila Sahkari Bank 1.12 லட்சம் விவசாய கடன் வாங்கியுள்ளோம். வங்கியில் இருந்து எங்களுக்கு 1.24 லட்சம் கட்டுமாறு நோட்டீஸ் வந்தது. அதனால் எனது தந்தை மிகவும் சோகமாக இருந்தார்.

அடுத்த நாள் நிலத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். பிறகு வீடு திரும்பும் பொழுது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிலைமை மோசமாகவே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் போனது. என்று தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு இருந்தார்.

 

முந்தைய எலக்ஷனில் பிஜேபி கட்சியின் தீபக் பைஜி என்பவர் தான் அரசியலுக்கு வந்தால் 2 லட்சம் வரை உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்கிறேன் ,என்ற வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அது எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

போடு! New Update! Super Star “லால் சலாம்” பாடல்!

0

இயக்குனர் மற்றும் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையை வைத்து இயக்கிக் கொண்டுள்ள படம் லால் சலாம் பற்றிய நியூ அப்டேட் வந்துள்ளது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றன.

 

இந்த படம் 2024 ஜனவரி பொங்கல் என்று வரவேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நிலையில் இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த லால் சலாம்  படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள். இந்த நிலையில் பாடல் ஒன்றை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இது ஒரு விளையாட்டு துறை சம்பந்தமான கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் இது கௌரவ  வேடத்தில் கபில்தேவ் அவர்களும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் தேர்த்திருவிழா என்று சொல்லப்படக்கூடிய பாடல் ஒன்று நாளை 5 மணிக்கு முதல் சிங்கிள் வெளிவருவதாக லைக்கா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் தனது ட்விட்டர் பக்கங்களிலும் அறிவித்துள்ளது.

 

https://www.instagram.com/p/C08UZoHxPaa/?igshid=NTYzOWQzNmJjMA==

 

ஜெய்லர் நடித்த மாஸ் காட்டிய தலைவர் அடுத்தது இந்த படத்திலும் தனது முழு திறமையும் வெளிக்காட்டி மக்களை உற்சாகப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.

ஏங்க! என்னங்க இப்படி இருக்கிங்க! உங்க நண்பர்களா இது?

0

1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நதியா.

இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அப்ப பார்த்த மாதிரி இப்பவும் இருக்கீங்க மேடம் என்று சொல்லும் அளவிற்கு

இவரது இன்றும் மாறாத இளமை பல படங்களில் நடித்து வருகிறார். துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

 

அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.

 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக சமீபத்தில் தனது கல்லூரி நண்பர்களை சந்தித்துள்ளார். அதை இன்ஸ்ட்கிராமில் பதிவு செய்துள்ளார்.

 

அதில் இவர் இன்னும் இளமையாக இருக்க கல்லூரி நண்பர்கள் வயதானவர்கள் போல தெரிகின்றன. தினமும் யோகா உடற்பயிற்சி செய்து உடலை நன்கு பாதுகாத்து வருகிறார்

#image_title

இந்த வீடியோவில் உள்ள நதியாவின் புகைப்படம் இப்பொழுது இருக்கும் டாப் ஹீரோயின்கள் கூட அந்த அளவிற்கு அழகாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது புகைப்படம் உள்ளது.