பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்!

0
77
Parents of child who complained of sex! Sons of BJP leader who was hit by a barrage!
Parents of child who complained of sex! Sons of BJP leader who was hit by a barrage!

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 60 வயதான இவர் பா.ஜ.க. பிரமுகராக இருக்கிறார். இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது மற்றும் 11 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பிப்பதோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிறட்டல் விடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மகாலிங்கத்தின் மனைவி ராஜலட்சுமி புகார் அளித்த சிறுமியின் தந்தைக்கும், தங்களுக்கும் போக்கியத்திற்கு இடம் வாங்கியது தொடர்பான பிரச்சனைகள், பல உள்ளதாகவும் பணத்திற்காக வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளதாகவும், உரிய விசாரணை செய்யாமல் போலீசார் தனது கணவரை கைது செய்துள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து புகார் அளித்த சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று விட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது , பாஜக பிரமுகர் மகாலிங்கம் வீட்டின் அருகே சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர் மற்றும் சுதாகர் மேலும் சிலர் சேர்ந்து அவர்களை வழிமறித்து கத்தி மற்றும் கம்பால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சிறுமியின் பெற்றோர் தரப்பைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரையும் கத்தியால் குத்தி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்தவர்களை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பாலியல் புகார் அளித்ததன் காரணமாக கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், தற்போது அந்த பிரமுகரின் மகன்கள் சுதாகர் மற்றும் 12 பேர் கொண்ட கும்பலை, அந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தாக்கி கத்தியால் குத்தியதாக போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் ஜவகர், சுதாகர் மற்றும் 4 பேரை கைது செய்துள்ளனர் மீதமுள்ள 8 பேரையும் தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.