போஸ்ட் ஆபீஸ் செயல்படும் நேரம் நீட்டிப்பு!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

0
34
Post Office Opening Hours Extended!! Important Announcement!!
Post Office Opening Hours Extended!! Important Announcement!!

போஸ்ட் ஆபீஸ் செயல்படும் நேரம் நீட்டிப்பு!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் உள்ள அனைத்து அஞ்சல் துறைகளும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தோடு பல்வேறு நலத்திட்டங்களை தினமும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நலத்திட்டங்களின் கீழ் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தில் கணக்கு தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

தற்போது தமிழக அரசானது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் மகளிர் உதவித் தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் செப்டம்பர் பதினைந்தாம் தேதி முதல் துவங்கப்பட உள்ள நிலையில், இதற்கான வேலைகள் தமிழகம் முழுவதும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் உதவித் தொகையை பெறுவதற்கு மகளிர் அனைவரும் அஞ்சல் துறையில் கணக்கு துவங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அஞ்சல் துறை செயல்படும் நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே அஞ்சல் துறை அலுவலகம் தினமும் காலை 9.30  மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30  மணி வரை செயல்படும். இதனால் ஏராளமானோர் இந்த அஞ்சல் துறையில் தங்களது சேவைகளை பெறாமல் செல்கின்றனர்.

இது தொடர்பாக கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் அஞ்சல் துறை காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்து ஆதார் சேவை மையமும் இனிமேல் முழுவதுமாக பன்னிரெண்டு மணி நேரம் இயங்க வாய்ப்புகள் உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

author avatar
CineDesk