கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

0
102
India Post income-News4 Tamil Latest Online Business News in Tamil
India Post income-News4 Tamil Latest Online Business News in Tamil

கடந்த நிதி ஆண்டில் இந்திய தபால் துறை வருவாய் என்ன தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1854 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 531 நிலையங்கள் உள்ளது.

இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 882 கிராமப்புற அஞ்சலகமாகவும் 15549 நகர்ப்புற அஞ்சலகமாகவும் உள்ளன. இதில் மொத்தம் 111 தலைமை தபால் நிலையங்கள் அடங்கும். 21.14 கிலோ மீட்டருக்கு ஒரு தபால் நிலையம் என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தபால் நிலையங்கள் இருக்கின்றன. தினமும் சுமார் இரண்டு லட்சம்பேர் கடிதங்களை பட்டுவாடா செய்கின்றனர்.

இணையத்தள வளர்ச்சி பொதுத்துறை தனியார் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தபால் துறை கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

எனவே திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டது,விரைவு தபால்கள் பலப்படுத்தப்பட்டது தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தபால் துறை அறிவிப்பு கொடுத்தது. இதன் காரணமாக 2008 -19 ஆம் நிதியாண்டில் இதில் இந்திய தபால் துறை 13,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதில் தபால் தலை மட்டும் 78 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தபால்கள் மூலம் 3 ஆயிரத்து 869 கோடியும் சேமிப்பு மற்றும் சான்றிதழ் பணிகள் மூலம் 8600 கோடியும் பிறவகை சேவைகளின் மூலமாக 686 கோடி என மொத்தம் 13 ஆயிரத்து 452 கோடியே 56 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தபால் துறையினர் கூறியதாவது லட்சக்கணக்கான பேர் சேமிப்பு கணக்கின் தொகுதி உறுப்பினராக உள்ளனர். காப்பீடு திட்டம், ஆதார் சேவை, பாஸ்போர்ட் சேவை பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பல புதிய சேவைகள் மூலமாக கடந்த காலங்களை விட வருவாய் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
CineDesk