ஷாருக்கான் கொடுத்த பிரஷர்! வேற வழியில்லாமல் இறங்கி வந்த நயன்தாரா

0
45

ஷாருக்கான் கொடுத்த பிரஷர்! வேற வழியில்லாமல் இறங்கி வந்த நயன்தாரா

நயன்தாரா திருமணத்திற்கு முன் தனது கணவர் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்தார். பின்பு இவரால் கம்பாக் கொடுக்க முடியாது என்று திரையுலகில் பலர் பேசினர். அதுமட்டுமின்றி இவர்களின் சரகோசி குழந்தை பெற்றெடுப்பும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் பல சர்ச்சைகளுக்கு இடையே இவருக்கான அடுத்தடுத்த படங்கள் காத்திருந்தது.

அதில் தற்பொழுது பெரிய பட்ஜெட் படமான அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்னுடன் தவானில் இணைந்தார். தவான் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது திரைக்கு வர உள்ளது. இதனின் அடுத்த கட்ட நடவடிக்கையாக படத்தின் ஃப்ரீ ரிலீஸ் விழாவானது நேற்று சென்னையில் சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.

https://www.instagram.com/nayanthara/?utm_source=ig_embed&ig_rid=31333048-b750-4967-aa69-2cf9dd3d685d

இந்த விழாவில் பங்கேற்க ஷாருக்கான் மற்றும் படக்குழுவினர் பலர் வந்த நிலையில் நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக நயன்தாரா, அவர்கள் தயாரிக்கும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் கலந்து கொள்வாராம். இதர தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் பட்சத்தில் அது சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளாராம். அந்த வகையில் ஜவான் படத்தின் பிரீ ரிலீஸ் பங்க்ஷனில் நயன்தாரா கலந்து கொள்ளாததால் அதனை ஈடு செய்ய இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இதில் முதல் போஸ்ட் ஆக ஜவான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். ஷாருக்கான் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் இந்த போஸ்ட் என பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஜவான் படத்தின் டிரைலர் போஸ்ட்டுக்கு அடுத்து தான் அவரின் மகன்களுடன் இருக்கும் வீடியோவையே வெளியிட்டுள்ளார். இவ்வளவு நாள் சமூக வலைத்தளத்தில் இருந்து அப்பாற்பட்டு இருந்த நயன்தாரா தற்பொழுது ஜவான் படத்திற்கு என்றே சமூக ஊடகங்களுக்குள் வந்துள்ளார்.