ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

0
243
#image_title

ஐந்தாவது முறையாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திரமோடி!!

இந்த ஆண்டில் கடந்த நான்கு முறை தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி ஐந்தாவது முறையாக மதுரையில் நடக்கவிறுக்கும் பாஜக மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வரயிறுக்கிறார்.

வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக மகளிர் அணி மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார், இந்த மாநாட்டில் மகளிர் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி விவரிக்கப்படவுள்ளது.
வரயிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் தமிழகத்திற்க்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசு நிகழ்வுகள் மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார், அந்த வகையில் தற்போது மதுரையில் இந்த மகளிர் அணி மாநாட்டிலும் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார்.

பிரதமரின் இந்த தமிழக வருகைக்கு முன்பே தேர்தல் ஆணையம் 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்துவிடும் என எதிர்பாண்க்கப்படுகிறது.

author avatar
Savitha