பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

0
35

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!! 

ராஜஸ்தானில் குடும்ப பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

பூனா ராமின் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவு வேலைக்காக கல் குவாரி சென்று விட்டார். அவரை அனுப்பிவிட்டு அவரது குடும்பத்தினர் தூங்கச் சென்றுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் பூனராமின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை கவனித்த அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் போலீசார் விழுந்து வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த நான்கு பேரும் உடல் கருகி இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. தர்மேந்திர சிங் யாதவ் கூறும்போது, தனிப்பட்ட பகையினால் இந்த படுகொலை நடந்திருக்க கூடும். இருப்பினும் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அவர்களை கோடரிக் கொண்டு வெட்டி கொலை செய்துவிட்டு உடல்களை இழுத்து வந்து வீட்டின் முன்புறத்தில் போட்டு தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் அந்த குடும்பத்தினரின் உறவினர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.