படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

0
137

படம் வாய்ப்பு இல்லையா என்று ரசிகர் கேட்க; லோக்கலாக பதிலளித்த ரித்விகா.! ஒரு நடிகை இப்படியா பேசுவது..?

நடிகை ரித்விகா பல படங்களில் நடித்து இருந்தாலும் பெரிய அளவில் சினிமா ரசிகர்களை ஈர்க்க முடியாமல் அடையாளம் தெரியாமல் இருந்தார். மெட்ராஸ் படத்தின் நடிப்பு மூலம் நல்ல அடையாளம் கிடைத்தது. சில வருடங்களாக மட்டுமே சினிமாவில் அடையாளம் தெரியக்கூடிய நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக படவாய்ப்பு இல்லாமல் போனதால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு காட்சிகள் மக்களிடம் முகம்சுழிக்க வைத்தது ஒரு பக்கம் இருந்தாலும் பொதுமக்களிடையே அந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இல்லை. இணையத்தின் வாசல் மட்டுமே அதற்கான கடைசி எல்லை என்று கூறலாம்.

சினிமாவில் ஆரம்ப காலத்தில் அமைதியாக நல்லவர்போல் இருந்த ரித்விகாவின் உண்மையான இன்னொரு முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது. எப்பேர்பட்ட சிறந்த நடிகராக இருந்தாலும் அவர்களிடம் தனிமனித ஒழுக்கம் இருக்கும், அவர்களிடம் நாகரிகமான பேச்சும் இருக்கும். ஆனால், ரித்விகா பெரிய கதாநாயகியும் இல்லை பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவரும் இல்லை.

சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை ரித்விகா பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ரசிகர் ஒருவர், “ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் இப்படி வெட்டியாக இருக்கிறார் போல” என்று கமண்ட் செய்திருந்தார். ரசிகரின் கமண்ட்டிற்கு சிறிதும் பொறுமை இல்லாமல், தர லோக்கல் நபரைபோல் மூடிட்டு போடா என்று அநாகரிகமாக பதிலளித்துள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சாதித்து கொடிகட்டி பறக்கும் எந்த நடிகையும் இப்படி பொது தளங்களில் அநாகரிகமாக பதிவு செய்ததில்லை. நடிகை ராஷ்மிகா படத்தையும் வடிவேலு படத்தையும் இணைத்து மீம்ஸ் உருவான போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதை ரசித்து ராஷ்மிகா பதில் கூறினார். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப்பை சைக்கிளில் அமரவைத்து ஓட்டிச் செல்வது போலவும், இன்னொருவர் தாஜ்மகால் முன்பு இவான்காவுடன் அமர்ந்திருப்பது போல புகைப்படத்தை எடிட் செய்து வைத்திருந்தார். இதை கவனித்த இவான்கா அனைவருக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியளித்தார்.

சினிமாவில் எதையுமே தனித்துவமாக சாதிக்காத ரித்விகா இப்போதே மூடிட்டு போடா என்று பொதுத்தளத்தில் அநாகரிகமாக பேசுகிறார். இன்னும் பெரிய நடிகையாகி பணம், பேருடன் கோடியில் வாழ்ந்தால் ரசிகர்களின் நிலை என்னாகுமோ என்று பலர் சமூகவலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

author avatar
Jayachandiran