இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க!!

0
33

இந்த ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடுங்க!

இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது.முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது.மேலும் நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.முதலில் மூட்டு வலி வர காரணம் உடல் பருமன்,முதுமை,எலும்புகளில் அடிபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது.

1.மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க ஆன்டி ஆக்ஸிடன்ட் முக்கிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட உணவு பொருளான . இலவங்கம்,அதிகளவு குர்குமின் கொண்ட மஞ்சள்,ஒளிவிக் ஆசிட் கொண்ட துளசி,மற்றும் ஆன்டி பயோடிக் பண்புகள் கொண்ட இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:-

கிராம்பு-2

மஞ்சள்-1/2 தேக்கரண்டி

துளசி-10 இலைகள்

இஞ்சி-1/2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அவை பாதியாக சுண்டி வந்தவுடன்,அவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு விருப்பப்பட்டால் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். மேலும் தொடர்ந்து எடுத்து வருவதால் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகள் நாளடைவில் குறையும்.

2.மூட்டுகளில் இருக்கும் ஜெல் தேய்மானம் ஆகாமல் இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட வால் நட்,ஆளிவிதைகள்,மீன் உள்ளிட்டவைகளை தினமும் உணவில் எடுத்து வருதல் நல்லது.

3.மேலும் எலும்புகள் பலம் பெற கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நம் உடலுக்கு மிகவும் அவசியம்.எலும்புகளுக்கு பலத்தை கொடுப்பதில் கீரைகள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கை வகிக்கின்றது.மேலும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டியவை முருங்கை கீரை, கருவேப்பில்லை, வெந்தய கீரை ஆகும். இவற்றில் 400 மில்லி கிராமுக்கும் மேலாக கால்சியம் சத்துக்கள் இருக்கின்றது.மேலும் இவற்றில் பாஸ்பரஸ் சத்துக்களும் அடங்கியுள்ளதால் தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ளுதல் நல்லது.தினமும் உணவு பருகிய பின் ஒரு எள் உருண்டையை தொடர்ந்து எடுத்து வந்தால் எலும்புகள் தேய்மானம் ஆகாமல் இருக்கும்.ஒரு எள் உருண்டையில் சுமார் 1450 மில்லி கிராம் கால்சியம் இருக்கின்றது.

4.மூட்டுகளுக்கு பலம் அதிகரிக்க மெக்னீசியம் சத்துள்ள வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை உண்டு வருதல் நல்லது.

5.எலும்புகள் தேய்மானம் ஆகாமல் இருக்க வைட்டமின் டி சத்து எலும்புகளுக்கு மிகவும் அவசியம் ஆகும்.இந்த வைட்டமின் சத்து சூரிய ஒளி மூலம் நமக்கு நேரடியாக கிடைக்கின்றது.மேலும் நாட்டு பசும் பால் ஒரு டம்ளர் என்ற அளவில் வாரத்திற்கு 2 முறை எடுத்து வருவதன் மூலமும் நமக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

மேலும் மூட்டு வலி உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்வது நல்லது.ஹோட்டல் உணவு,கூல் ட்ரிங்க்ஸ்,ஜங்க் புட் உள்ளிட்டவற்றை தவிர்த்தல் நல்லது.காரணம் இவைகள் நம் உடலில் உள்ள எலும்புகளின் கால்சியம் சத்தை வெளியேற்றி விடும் தன்மை கொண்டது.