என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு நிச்சயதார்த்தமா?

0
74

தற்பொழுது சினிமா துறையில் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக சீரியல்களில் வரும் ஹீரோயின்களும் மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். இவ்வகையில் விஜய் டிவியில் தற்பொழுது வெளியாகி வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா,”முல்லை” என்னும் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இந்த சீரியலின் மூலம் நடிகை சித்ராவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலமாகவும் தனது ரசிகர் பட்டாளத்தைப் பெருக்கி வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நன்றாக நடனம் ஆட கூடியவரும் ஆவார். பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று உள்ளார்.

தனது நடிப்பிற்காக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சித்ராவிற்கும் தொழிலதிபர் “ஹேமந்த்” என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது ஆக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் முதன்முதலில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களை தன் வசப்படுத்தினார். இதில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தாலும், மற்றவர்களைவிட இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஈர்க்கப்படுகிறார் .

கதிர்-முள்ளை இன்று இவர்களது ஜோடிக்கு என சமூக ஊடகங்களில் பெரிய கூட்டமே உள்ளது. மேலும் இவர்கள் “ஜோடி” என்னும் நடன ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வைரல் ஆகினர். இவர்களது ஜோடி நடனம் இன்றளவும் இணையங்களில் வைரலாக உள்ளது
சித்ரா ஆரம்ப காலத்தில் சிறிய பாத்திரங்களில் சின்னத்திரையில் வலம் வந்தாலும், அவர் சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தாலும், வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை பிரகாசிக்க செய்தார்.

இந்நிலையில் நடிகை சித்ராவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக சமீபத்தில் ஒரு நேரலையில் அவர் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே தற்பொழுது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர். அவரது பெயர் ஹேமந்த். இந்த தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளாராம் சித்ரா. இது ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K