சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை … Read more

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் நாளை மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதில், நாளை முதல் கட்ட வாக்குப்பதிவும், 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த … Read more

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

உலக ஆணழகன் போட்டி.. தங்கம் வென்ற தமிழக வீரர்.!!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 47 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை தமிழகத்தைச் சார்ந்த வீரரான சுரேஷ் தங்ககப்பதக்கத்துடன் வென்றுள்ளார். அதேப்போல், ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான விக்னேஷ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மேலும், சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை.!! இன்று முதல் தொடக்கம்.!!

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு உதவித்தொகையை வழங்குமாறு … Read more

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு … Read more

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!!

ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வான நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் போட்டியின்றி தேர்வானதையடுத்து கடந்த 1ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் … Read more

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநீர் குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்!

Movie style stolen juveniles! Betrayed CCTV! The public who took the revolution!

திரைப்பட பாணியில் திருடப்பட்ட இளநி குலைகள்! காட்டி கொடுத்த சிசிடிவி! புரட்டி எடுத்த பொதுமக்கள்! சென்னையில் கே.கே நகர் பகுதிகளில் பழைய சினிமா பாணியில் இளநீர் திருடி தனியாக இளநீர் கடை வைத்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 80 களில் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான கோவில்காளை என்ற ஒரு படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு இளநீர் கடை வைத்து இருப்பார். அந்த கடையில் இருந்து கயிறு மூலம் செந்தில் மற்றும் … Read more

உள்ளாட்சித் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது ..நடவடிக்கை எடுக்க புகார் எண்கள் அறிவிப்பு.!!

உள்ளாட்சித் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது ..நடவடிக்கை எடுக்க புகார் எண்கள் அறிவிப்பு.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்தவகையில் விவசாயிகளுக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது இதுவே முதல் முறையாகும்.இதனால் விவசாயிகள் பலர் பலனடைந்தனர்.அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.அவர் பரிந்துரையின் பேரில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்படிப்புகள்  படிப்பதற்கான முன்னுரிமை … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more