தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!! உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார். மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி … Read more

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு!

These students can no longer pursue medical studies in India! Action announcement issued by the National Medical Council!

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட அப்டேட்டை வெளியிட்ட உக்ரைன் நடிகை மரியா! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்த அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?

The announcement made by Minister Ma Subramaniam! Is there a monkeypox problem in Tamil Nadu?

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? சென்னை  தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தற்போது  செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாம் தவனை தடுப்பூசியை பொருத்தவரை 85 சதவீத பேர் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு … Read more

உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!..

Russia attacked again in violation of commitment! Criticism that is fair!..

உறுதியை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!.அவர்களே நியாயப்படுத்தி  விமர்சனம்!.. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டது. 20 க்கும் மேற்பட்ட பீரங்கி, ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா கருங்கடலில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டது. தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண  சென்ற வாரம் ஐ.நா மற்றும் துருக்கி அரசு … Read more

நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!!

Missile attack on the port of Ukraine in the evening, Russia promised in the agreement yesterday morning!! Information released!!

நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!! உக்ரைன் மற்றும் ரஷ்யா  போர் தொடர்ந்து மாத கணக்கில் தொடுத்து  வருகிறது. இதனால் அப்பாவிப்பட்ட ஜனங்கள் உயிரிழக்கிறார்கள். மேலும் உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடர்பாக வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறிவுள்ளது.மேலும் அந்நாட்டு ஒடெசா  துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இரு காலிபர் ரக குரூஸ் ஏவுகணைகள் மூலம்  ஒடெசா துறைமுகத்தின் மீது சனிக்கிழமையான நேற்று … Read more

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு!

Medical students studying in this country have no place in Indian college! Action order of the Union Government!

இந்த நாட்டில் படித்துக்கொண்டிருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரியில் இடமில்லை! ஒன்றிய அரசின் அதிரடி உத்தரவு! உக்ரைன்-ரஷியா இருநாடுகளுக்கிடையேயான போர் சில மாதங்களாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. மேலும் அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளது. மேலும் ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் … Read more

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..

It is reported that Ukraine and Russia are going to sign the grain export in the presence of the UN Secretary General!!..

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!.. உக்ரைன்-ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இதனால் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்து வருகிறது. இதனை புதுப்பிக்கும் நோக்கில் தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்கிரனும் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற  தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில் பல மாதங்களாக தானே ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது … Read more

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!

We are ready to help these countries!! Govt of India is amazing!!

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் … Read more