கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Kodaikanal E-Pass

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி … Read more

கொரோனா பாதித்த பெண் தப்பியோடி காய்கறி விற்றதால் அதிர்ச்சி!

Telangana covid affected woman sell vegetable

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று காய்கறி விற்பனை செய்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், காய்கறிகளை வாங்குவதற்காக அங்குள்ள சந்தைக்கு சென்றார். அப்போது கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்புக்கு நேற்று சிகிச்சை பெற்ற பெண், மறுநாளே காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்து மருத்துவனை செல்லுமாறு அந்த … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

கொரோனா பாதித்த சிங்கங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Stalin Visit Vandaloor Zoo

கொரோனா பாதித்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இறந்தது. ஏற்கனவே ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா (உத்திரபிரதேசம்) சிங்க உலாவிடப் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் குறைந்து வருவதால் நிம்மதி!

Corona Patients

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் குறைந்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை 36ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 20,421 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவையில் 2,645 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,644 பேரும், ஈரோட்டில் 1,694 பேரும், சேலத்தில் 1.071 பேரும், திருப்பூரில் 1,068 பேரும் … Read more

நாமக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் அதிர்ச்சி!

Namakkal Hostital Dog

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 719 நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் … Read more

வண்டலூரில் புலிகளுக்கும் கொரோனா டெஸ்ட்! சிங்கம் இறந்ததால் நடவடிக்கை!

Tiger

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உள்ள சிங்கங்கள் சரியான உணவு உண்ணாமல் இருந்தன. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட டெஸ்டில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அன்று மாலையே தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்டன. விஜி மற்றும் சசி என்ற இரண்டு … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!

cm stalin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சம் பலரிடம் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நேற்று 22 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முழு ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்புகள் உள்ளன. … Read more

தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி!

தமிழகத்தில் 22651 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு! பலி குறையாததால் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையில் 36 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டி, தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 15வது நாளாக படிப்படியாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதில், கோவையில் 2,810 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,971 பேரும், ஈரோட்டில் 1,619 பேரும், சேலத்தில் 1,187 பேரும், திருப்பூரில் 1,161 பேரும் … Read more

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Black Fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த … Read more