கொட்டித்தீர்த்த அதிதீவிர கனமழை!! நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் உயிரிழப்பு!! மீட்பு பணி வீரர்கள் தீவிரம்!!

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையானது மிக தீவிரத்தை அடைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், மும்பை மற்றும் டில்லியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல இடங்களில் 120 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்பின், இரவு நேரத்திலும் விடாமல் பல பகுதிகளில் இடியுடன் … Read more

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தளர்வு!! மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பயணம் செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்து உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை … Read more

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி!! புதிய முயற்சியால் குவியும் பாராட்டு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இதன் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகியன வெளியானது. இந்த நிலையில் அந்தத் தேர்வில் 99.47 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாத காரணத்தால் தேர்வுகள் மிக எளிமையாகக் நடத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் அதிகமாக கூறப்பட்டது. … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

ஜூலை 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இருந்தாலும், மக்கள் பொதுஇடங்களில் கூட்டமாக சுற்றி திரிந்தனர். அதன் பின் முழு ஊரடங்கு … Read more

அபராதங்களை முதல்வரின் பொது நீதிக்கு செலுத்துங்கள் விஜய்க்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விஜய் அவர்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரும் வழியை தடை விதிக்கக்கோரி விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கூறியதாவது, நாங்கள் சமூக நீதிக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் இந்த மாதிரியான வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. நடிகர்கள் அனைவரும் ரியல் … Read more

குழந்தைகளுக்கு பெரும் உதவித்தொகை!! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாது, என்றாலும் பல சலுகைகளை குடும்பத்தினருக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியான ஊழியர்கள் ESICஇல் பதிவு செய்து இருந்தால், குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் தினசரி 90% சமமான தொகையை இரண்டு வருட காலத்திற்கு பெறுவார்கள். இந்த திட்டமானது மார்ச் 24.2020 முதல் … Read more

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அனைத்து சலுகைகளும் நிறுத்தம்! அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான். இங்கு மக்கள் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதன் காரணமாக உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு நலத்திட்டங்களை குறைத்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு … Read more

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்! அரசு எடுத்த திடீர் முடிவால் ஷாக்!

இமாச்சல பிரதேசத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஒரு மாதத்திற்குள் சுமார் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்ந்துள்ளனர். சிம்லா மற்றும் மணாலி மலைவாச தலங்களில் சுற்றுலா பயணிகள் விதி முறையை பின்பற்றாமல், மாஸ்க் அணியாமல் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். இதனால் கோபமடைந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இமாச்சல பிரதேசத்தை மிகவும் கண்டித்தது. இதன் காரணமாக இமாச்சல பிரதேச அரசு முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் சுற்றுலாப்பயணிகளை ஒடுக்க … Read more

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! எந்தெந்த மாவட்டங்களுக்கு பஸ் சேவை?!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊரடங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் செயல்படும் நேரமானது இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதனால் கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஊரடங்கில் … Read more