அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?
அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?
அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்! ஓமன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தற்போது தமிழக இளைஞர் ஒருவருக்கு தொற்றுநோயாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை உண்டாக்கிய கரோனாவால் “சர்வதேச சுகாதார நிறுவனம் அவரசநிலை” என்று அறிவித்துள்ளது. இந்த புதிய … Read more
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இயங்கும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த பட்டியல் தயார் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த பட்டியலை முதற்கட்டமாக, அனைத்து மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியதன் மூலம் … Read more
தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!! தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார். பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி … Read more
பணியின் போது அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!! தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலக வேலையின் போது அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பலர் வேலைக்கான அடையாள அட்டையை அணிவதில்லை என்று பல்வேறு புகார்கள் குவிந்த காரணத்தால், அரசு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறையின் மூலம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வேலை நேரத்தின் போது ஒவ்வொரு அரசு ஊழியரும் … Read more
மீண்டும் கூடும் தமிழக சட்டபேரவை: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்? தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு … Read more
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் மட்டுமே அரசு வேலைக்கு ஆட்கள் தெரிவு அமைப்பாக பலர் கருதுகின்றனர். ஆனால் பல அரசு நிறுவனங்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்பும் நிறுவனங்களாக தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் டிஎன்பில் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம். தற்போது அதில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு … Read more
பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலத்தை சட்டமாக அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்த பெட்ரோலிய மண்டலம் ரசாயன மண்டலம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் வேளாண் செழிப்பு பகுதிகளான காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக சேலத்தின் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் … Read more
பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!! திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது. இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு … Read more
தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் விதமாக கோயிலின் சுற்றுச் சுவரில் பாரம்பரியமான வண்ண வண்ண ஓவியங்களை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளனர். அரசுக்கு சொந்தமான சுவர்களிலும் மாணவர்களின் கைவண்ணம் ஓவியங்களாக ஜொலிக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற நாளை சிறப்பாக நடைபெற உள்ளதால் கோயில் அலங்கரிப்பு, தமிழ் வேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. தஞ்சை கோயிலின் குடமுழுக்கு நீண்ட … Read more