தினமும் இந்த 1 மட்டும் எடுத்துக்கோங்க!! உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

0
190
#image_title

தினமும் இந்த 1 மட்டும் எடுத்துக்கோங்க!! உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

நமது அன்றாட வாழ்க்கையில் இதை மட்டும் செய்யுங்கள்!! கண்டிப்பாக அதிசயத்தை பார்ப்பீர்கள்!!நெல்லிக்கனியை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் ” தினமும் ஒரு கனி ” என்று எடுத்துக் கொள்ளும் போது “ஆயுள் கூடும் “என்று வரலாறு உள்ளது. நெல்லிக்காயில் 80% நீர் சத்து நிறைந்திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து ,மாவுச்சத்து, நார்ச்சத்து, குரோமியம், பாஸ்பரம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி நிறைந்திருக்கிறது.

நெல்லிக்காயின் பயன்கள்:

நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சத்துக்கள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது.

நெல்லிச் சாறு கல்லீரலில் உண்டாகும் நோய் தொற்றையும் கிருமிகளையும் அளிக்கிறது. இதனால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது.

வாய்ப்புண் உள்ள நேரங்களில் நெல்லி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்பகுதியில் உள்ள கிருமிகள் வெளியேறி வாய்ப்புண் சரியாகிவிடும்.

நெல்லிக்காய் தலைமுடி உதிர்வதை குறைத்து தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

நெல்லிக்காயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம்மை இளமையோடு வாழ வைக்கும்.
இளமையைத் தக்க வைக்க நினைத்தால் தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

இவ்வளவு அற்புதமான குணங்களைக் கொண்ட நெல்லிக்காயை தினமும் உண்டு அதன் நன்மைகளைப் பெற்று மகிழ்வோம்.

 

 

author avatar
Selvarani