நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

0
217
#image_title

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பேய் மழை பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

வரலாறு காணாத மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உடமைகளை இழந்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர் கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த சில தினங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வரை வெள்ள நீர் வடியாமல் இருக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை அதாவது டிசம்பர் 20 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.