தமிழக அரசு வேலை!! மாதம் ரூ.50000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

0
43
#image_title

தமிழக அரசு வேலை!! மாதம் ரூ.50000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள “உதவி மின் கம்பியாளர்” பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை

பணி: உதவி மின் கம்பியாளர்

காலியிடங்கள்: மொத்தம் 06

பணியிடம்: தூத்துக்குடி – சுப்ரமணிய சுவாமி கோவில்

கல்வி தகுதி: உதவி மின் கம்பியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர் அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: உதவி மின் கம்பியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 28 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: உதவி மின் கம்பியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,600/- முதல் 52,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: உதவி மின் கம்பியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

உதவி மின் கம்பியாளர் பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: அக்டோபர் 30