2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

0
30
#image_title

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தை பொறுத்த வரை வழக்கமாக, காந்திஜெயந்தி,சுதந்திரதினம்,போன்ற முக்கியமாக நாட்களில் டாஸ்மார் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 2 8 (மிலாடி நபி)அன்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்றும் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் சென்னை ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே.

சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.அந்த செய்திக் குறிப்பில் நாளைமறுநாள்,மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு) 2 நாட்கள், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் இயங்ககூடாது எனவும், விதிகள் 2003-ன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச்சார்ந்த பார்கள்,எப்.எல்.-2,மற்றும் எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்கள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் ,எப்.எல்.11உரிமம் கொண்ட பார்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்ட வேண்டும் என்றும், மதுபானத்தை வெளியில் இருந்து கூட விற்பனை செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிடிருந்தார்.

எனவே இது மது பிரியர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாகவுள்ளது