தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்-தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

0
97

தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், நிரந்தரமாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் மதுவிலக்கு குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றி இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.