‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

0
93

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

மார்ச் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சூரரைபோற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இதனால், சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக நடிகர் சூர்யா தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் நாளை மறுநாள் (பிப்ரவரி 18-ந் தேதி) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

author avatar
Parthipan K