மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

0
110
The husband who sold his wife in a bargain! Shocked bride!
The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது.

பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து வருகிறது. தற்பொழுது ஒடிசாவில் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவில் கலஹண்டி என்ற மாவட்டத்தில் கிராப் பெருக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது இவரது ஊருக்கு அருகில் உள்ள வேறு ஒரு ஊரில் பூர்ணிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம், நான் டெல்லிக்கு வேலை செல்கிறேன் அதனால் உங்களது மகளையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் எனக் கூறியுள்ளார். இருவர் வீட்டாரும் சம்மதித்து இவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் டெல்லிக்கு சென்ற பிறகுதான் இவரது மனைவி பூர்ணிமாவிற்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.

தாலி கட்டிய கணவரை மனைவி என்று கூட பாராமல் வேறொரு நபருக்கு விற்று உள்ளார். ஆயிரக்கணக்கில் புரோக்கரிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு இவரது மனைவியையே விற்று உள்ளார். பூர்ணிமா நடந்தது குறித்து அவரது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அளித்ததன் பெயரில் போலீசார் பல இடங்களில் கிராப் பெருக்கை தேடி வந்தனர்.பின்பு அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.திருமணமாகி ஓர் வாரத்திலேயே,கணவரே தன் மனைவியை விற்ற விவகாரம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.