ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

0
219

ஓட்டை பிரித்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த இளைஞன்!!

நெல்லை மாவட்டம் பனங்குடி பகுதியில் உள்ளது கோரிகாலனி என்ற கிராமம்.அந்த கிராமத்தில் கணவனை இழந்த 68 வயதான மூதாட்டி ஒருவர் கூலி வேலை செய்துகொண்டு தனிமையாக வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் அந்த மூதாட்டியின் வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் குதித்து,தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.தனக்கு நடந்த கொடுமையை குறித்து அந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினர் இடமும் உறவினர்களிடமும் கூறியுள்ளார்.

இந்த வன்கொடுமை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் நிறைந்த இடத்தில்,நள்ளிரவில் மூதாட்டியை வீட்டில் புகுந்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleஇன்று கால பைரவர் வழிபாடு நல்லது! இன்றைய ராசி பலன் 23-10-2020 Today Rasi Palan 23-10-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here