வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

0
61
The prank done while riding the cart! Police in search!
The prank done while riding the cart! Police in search!

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுது புதிதாக யோசிப்பார்கள் போல பாருங்கள் இந்த செய்தியில் வண்டி ஊட்டும் போது கூடவா இப்படி நடந்து கொள்வார்கள். எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ? தெரியவில்லை.

சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது 30 வயதான இவர் பட்டதாரி. இந்த பெண் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய கணவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் தனது ஸ்கூட்டரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து, வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கையால் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு மற்றொரு கையால் அவரது உடலைத் தொட்டு பாலியல் ரீதியான ரகளை செய்துள்ளார்.

அந்த வாலிபரின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஆஷா தனது ஸ்கூட்டியை நிறுத்தி அந்த வாலிபரிடம் சண்டை போட்டுள்ளார். உடனே முக கவசம் அணிந்து இருந்த அந்த வாலிபர் தனது செயலை விட்டுவிட்டு தனது வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்று தப்பி ஓடிவிட்டார். அந்த நபர் மீது ஆஷா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

எனவே கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.