பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

0
78
The student who jumped from the third floor in the school! The facts revealed in the police investigation!
The student who jumped from the third floor in the school! The facts revealed in the police investigation!

பள்ளியில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த மாணவன்! போலீசார் விசாரணையில் வெளிவந்த உண்மைகள்!

ஓசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்.இவருடைய மனைவி மாலதி இவர்களின் மகன் ரோகித்(12).இவர் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக தீபாவளி பண்டிகைக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.

அதனால் பள்ளிக்கு சென்ற ரோகித் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து சக மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் உடனடியாக ரோகித்தை மீட்ட பள்ளி நிர்வாகம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ஓசூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதல் கட்ட விசாரணையில் மாணவர் படித்து வரும் இரண்டாவது தளத்தலிருந்து அவர் மூன்றாவது தளத்திற்கு நடந்து சென்றுள்ளார்.அவர் மீண்டும் அங்கிருந்து கீழே இறங்கி வந்துள்ளார்.ஆனால் மீண்டும்  மூன்றாவது தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார் என கூறப்படுகிறது.இது குறித்து மாணவரின் பெற்றோர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

author avatar
Parthipan K