பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!

0
83
The thing the mother did all over the daughter's body! The peak of rage!
The thing the mother did all over the daughter's body! The peak of rage!

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!

திருமணமான அனைவரும் தங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு பிள்ளையை பெற்று விடுகின்றனர். அவர்களை ஒழுங்கு முறையில் வளர்க்க முடியாமல் சிலர் விட்டுவிடுகின்றனர்.பலர் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் குழந்தைகளை சபித்து வருகின்றனர். நாளடைவில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால் பிள்ளைகளை சபித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சில மாதம் முன் கணவர் மேல் உள்ள கோபத்தை பச்சிளம் குழந்தை மேல் காட்டியதன் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் குமரமங்கலம் என்ற ஊரில் இரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு இடையே பெரும் பிரச்சனை நடந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சனை முடிவுக்கு வராமல் இறுதியில் கணவர் மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவர் பிரிந்து சென்ற கோபத்தை அந்தத் தாய் தன் பெற்ற குழந்தையிடமே காட்டியுள்ளார். அவர் மீது கோபம் ஏற்படும் பொழுதெல்லாம் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி வருவாராம். அவர்மேல் கோபம் ஏற்பட்டு உச்ச கட்ட நிலையை கடந்து, அந்த சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். உடல் முழுவதும் சூடு போட்டதும் சிறுமி வலிதாங்க முடியாமல் கதறி உள்ளார்.சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அங்குள்ள அக்கம்பக்கத்தினர் குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கேட்டு ,காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைக்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து அந்தத் தாயிடம் தற்போது விசாரணை நடத்த கையில் தனது குழந்தை ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் சூடு வைத்தேன் என்று கூறியுள்ளார். இந்த பதிலை ஏற்க மறுத்த போலீசார் இதனையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.அப்போது தான் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இவர் அன்றாடம் தனது கணவரிடம் சண்டையிட்டு தன் பெற்ற பிள்ளையையே அடித்து துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளனர். அதனையடுத்து போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாய் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.