பாதியில் நிறுத்தப்படும் 2 ஜீ தமிழ் மெகா ஹிட் சீரியல்கள்.!! அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட டி.வி நிறுவனம்.!!

0
84

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு மெகா தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரு தொடர்களும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் முடிக்கப்படுவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அன்பான நேயர்களுக்கு வணக்கம், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்திய ஆகிய இரண்டு தொடர்களை வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும்” தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த தகவலால் ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/p/CUwfs9BrDHN/?utm_medium=copy_link