என்னுடைய கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!

0
46
They asked me to take it off without even leaving it on my neck!! Malaysian woman complains against Chennai airport officials!!
They asked me to take it off without even leaving it on my neck!! Malaysian woman complains against Chennai airport officials!!

என்னுடைய  கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!! 

தனது தாலியை கழட்ட சொன்னதாக மலேசிய பெண் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியா நாட்டில்  இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வவந்துள்ளனர்.அவர்களிடம்  விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுப்பதற்கு என  சுங்க பகுதிக்கு வந்தபோது, அங்கிருந்த சுங்க இலாகா அதிகாரிகள், “நீங்கள் இந்திய சுங்க விதிகளின்படி இல்லாமல் கூடுதல் நகைகளை அணிந்து வந்து உள்ளீர்கள். அவற்றை கழற்றி தாருங்கள்” என கூறி உள்ளனர்.

அப்போது அந்த பெண் தான் தாலி அணிந்து இருப்பதால் அதை தர முடியாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் அந்த பெண்ணின் கணவரின் நகைகளை வாங்கி கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மலேசியாவுக்கு திரும்ப செல்லும்போது வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து அந்தப் பெண் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் கணவருடன் மலேசியாவில் இருந்து திருப்பதி, திருத்தணி என்று கோவில்களுக்கு செல்ல சென்னை வந்திருந்தேன்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம் சுங்க இலாகா அதிகாரிகள் அலை கழித்தனர். கழுத்தில் இருந்த தாலியை கூட கழற்றச் சொன்னார்கள். நான் வாக்குவாதம் செய்ததால் கணவரிடம் நகைகளை வாங்கிக் கொண்டனர். எவ்வளவு நகைகள் கொண்டு வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சுங்க இலாக்கா அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது சுங்க விதிகளின்படி அளவுக்கு அதிகமான நகைகளை அணிந்து வந்தால் உரிய அனுமதி அறிக்கையை தர வேண்டும். அனுமதி எதுவும் இல்லாத பட்சத்தில் கூடுதலான நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு திரும்பி செல்லும் பொழுது வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.