இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

0
132
#image_title

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

தற்பொழுது கிடைக்கும் துரித உணவுகளை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு என ஆரம்பித்து நெஞ்செரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து விடுகிறது.

எனவே இதனை தடுக்கும் வகையில் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு சாப்பிட்டு ஏதேனும் உடலில் இதுபோல உபாதைகள் ஏற்பட்டால் நம் வீட்டில் இருந்து சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சோம்பு

அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த சோம்பு ஒரு அருமருந்தாக பயன்படும். சோம்பு ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும். அதுமட்டுமின்றி கண்பார்வை திறனை அதிகரிக்க சோம்பு ஓர் நல்ல பொருள்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண் வாடும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு பெருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் இதனை செய்து விட வேண்டும்.

இரவு முழுவதும் இவ்வாறு இருப்பதால் சோம்பு சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும்.

அடுத்த நாள் காலையில் இந்த சோம்பு தண்ணீரை நான்கு முதல் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்பு இந்த பானத்தை வடிகட்டி சிறிதளவு கற்கண்டு சேர்த்து பருகி வரலாம்.இந்த சோம்பு தண்ணீர் ஆனது முடி உதிர்வு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும்.அசிடிட்டி பிரச்சனைகளுக்கும் இந்த சோம்பு நீர் நல்ல பயனளிக்கும்.

கண்ணில் ஏற்படும் எரிச்சல் என அனைத்திற்கும் நல்ல தீர்வளிக்கும்.