விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

0
31
#image_title

விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!

கடந்த செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் பற்றியும் இந்துக்களை மலேரியா,டெங்கு மாதிரி கொலை செய்துவிடுவேன் என்றும் பேசினார்.இவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.நாட்டின் கட்சி தலைவர்கள்,இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பாஜக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு தலைமை ஏற்று நடத்தினார்.

இந்த போராட்டத்தில் பேசுவதற்கு ஒலிபெருக்கி வைக்க காவல் துறை அனுமதி வழங்க வில்லை.இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் எச். ராஜா
வாக்குவாதம் செய்தார்.இதனை தொடர்ந்து ஒலிபெருக்கி வைக்க காவல் துறை அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதனையடுத்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதற்கு முன்னதாக நிருபர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா அவர்கள் நாட்டில் அதிகமான இந்துக்கள் வசித்து வருகிறார்கள்.இப்படி இருக்கையில் இந்துக்களை இனப்படுகொலை செய்து விடுவதாக கூறிய கிரிமினல் உதயநிதியை காவல்துறையினர் கைது செய்திருக்க வேண்டாமா? இவர்களால் உதயநிதியை கைது செய்ய முடியவில்லை என்றால் இந்த காக்கிச்சட்டையை போடுவதற்கான தகுதியையே அவர்கள் இழந்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்.

திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம் என்று கூறிய அவர் சனாதனம் என்பது மனிதர்களை சார்ந்தது என்றார்.இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென்றும்,சனாதனம் குறித்தும் ஆணவத்துடன் பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக கைது செய்ய வேண்டும்.தமிழகத்தில் இருக்கும் திராவிட இயக்கங்களை அழித்து பாஜக ஆட்சியமைக்கும்.விலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்று எச்.ராஜா தெரிவித்தார்.