இன்றைய ராசி பலன் 08-09-2020 Today Rasi Palan 08-09-2020

0
60

இன்றைய ராசி பலன்- 08-09-2020

நாள் : 08-09-2020

தமிழ் மாதம்: 

ஆவணி 23, செவ்வாய்க்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: 

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

எம கண்டம்:

காலை 9.00 முதல் 10.30 வரை.

குளிகன்:

பிற்பகல் 12.00 முதல் 1.30 வரை,

திதி:

சஷ்டி திதி இரவு 12.03 வரை பின்பு தேய்பிறை சப்தமி.

நட்சத்திரம்:

பரணி நட்சத்திரம் காலை 08.26 வரை பின்பு கிருத்திகை .

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது.

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். வேலை இல்லாதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பின் தானாகவே சரியாகிவிடும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளிலும், போட்டிகளிலும் சிறப்பான வெற்றியைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொட்டதெல்லாம் துலங்கும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பகல் 03.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் ஒருசிலருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே கூடுமானவரை உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று உங்கள் ராசிக்கு பகல் 03.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்றம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக விருத்தி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள். பெண்கள் பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகளை அனுபவிக்க நேரலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் தீர உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. பெண்களின் விருப்பங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

 

 

 

 

 

author avatar
Kowsalya