சிவகாசி வெடிஆலையில் வெடி விபத்து?

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர். மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் … Read more

டோனிய பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

டோனிய பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த போட்டியில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒரே அணியில் சேர்ந்து விளையாடுவார்கள். இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளேமே உள்ளனர். ஆனால் இந்த முறை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக … Read more

வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. முறையாக வரி செலுத்துவோர் கௌரவிப்பதற்காக ”வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாளரை கௌரவித்தல்”  என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக சங்கத்தினரும் பட்டயக் கணக்கர் சங்கத்தை சேர்ந்த வரும் வரி செலுத்திய … Read more

ஆயுர்வேத துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று

ஆயுர்வேத துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று

டெல்லி: மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கர்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதையடுத்து அவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு அரசு ஆதரவா?

Does the Government support for Gail gas pipeline version on protected farmland

பாதுகாக்கப்பட்ட வேளாண் விளை நிலங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதனை வேளாண் மண்டலங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் குழாய் பதிப்பது, அரசின் அறிவிப்பிற்கு மதிப்பளிக்காமல் செயல்படுவதா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.   இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் … Read more

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர்.இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து ரூபாய் 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார்.இந்தக் கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ஏழு லட்சம் வரை கொடுத்து விட்டாராம். இருந்தபோதும் ஜோசப் கணேசனின் … Read more

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று! இளைஞர்களான அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்!

சர்வதேச இளைஞர்கள் தினம் இன்று! இளைஞர்களான அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பெற்று சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. அனைவருக்கும் இளைஞர்கள் தின நல்வாழ்த்துக்கள். “இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை … மறைக்கின்றன … உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை … தள்ளி வைக்கின்றன … தோல்விகள் உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் உன்னுடைய தோல்வியில் இன்னொருவனின் வெற்றி … Read more

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறாத நிலையில் தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கும். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 … Read more

தேர்தலுக்காக திமுகவினர் போட்ட நாடகம்! அம்பலப்படுத்திய ஹச் ராஜா

H Raja Says Next Arrest will Be Dayanidhi Maran-News4 Tamil Online Tamil News

திமுகவின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அங்கு சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு பற்றி கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது தனக்கு இந்தி தெரியாது தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும், அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா? என்று … Read more