வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

0
50

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது.

கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்!

முறை 1:

1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு ஸ்பூன் முழுவதும் கடலை மாவை போடவும்.

2. பின் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு பசை போல தயாரித்துக் கொள்ளவும்

இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தேய்த்து விடவும் அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை இதனை செய்யும்பொழுது உங்களது வறண்ட சருமத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

முறை 2:

1. முதலில் ஒரு bowl-ல் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்.

2. பிறகு அதில் கற்றாழை ஜெல்லை போடவும்.

நன்றாக கலக்கி ஒரு பேஸ்ட் பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதனை உங்களது கண்களுக்கு அடியில் பற்று போல போடும் பொழுது கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கிவிடும். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யுங்கள்.

கடலை மாவுக்கு ஏராளமான குணங்கள் உள்ளன. இதனை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது உங்களது சருமம் மிகவும் பொலிவுடனும்,ஆரோக்கியத்துடன் காணப்படும் வீட்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்தி மகிழ்ச்சி பெறுங்கள்.

 

author avatar
Kowsalya