வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

0
83
#image_title

வீரப்பனின் சமாதியில் உறுதி மொழி எடுத்துக் கொண்ட வித்யாராணி!

கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜகவில் ஓ.பி.சி பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த வித்யா ராணி கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்களுடனும் கூட்டணிஅமைக்காமல் நாற்பது தொகுதிகளிலும் தன்னிச்சையாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார் வித்யா வீரப்பன்.

கடந்த மாதம் நாம் தமிழர் கட்சியில் இணைந்த வித்யாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக விழாவில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை கிருஷ்ணகிரி வேட்பாளராக அறிவித்தார்.

எனவே வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு இன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தனது தந்தையான வீரப்பனின் நினைவிடத்தில் தனது வேட்பு மனுவை வைத்து வணங்கி உறுதி மொழி எடுத்துக் கொண்டார் வீரப்பனின் மகள் வித்யா

ராணி.