ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

0
57

ஸ்டாலின் தகப்பனே வந்தாலும் எங்கள் வெற்றியை தடுக்க முடியாது –  பாஜக வினோஜ் பி செல்வம்!!

தமிழகத்தில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசியல் சார்ந்த வேலைகளை தீவீரமாக செய்து வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ராக்கெட் ஏவுதளம் நிறுவதற்கு அடிக்கல் நாட்ட தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.இதனையொட்டி அனுமின் நிலையதில் நிறுவப்பட்டுள்ள ஏனைய எரிபொருள் நிரப்புவதற்கான பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்தார்.அந்த விழாவின் pபிரதமர் வருகை என தொடங்கி அனைத்து பொறுப்புகளையும் பாஜக மாநில செயலாளர் வினோத் பி செல்வம் ஏற்று சிறப்பாக நடத்தினார்.

இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் வினோஜ் பி செல்வம் அவர்கள் திமுக மற்றும் காங்கிரசை எதிர்த்து ஆவேசமாக பேசினார்.அதில் அவர் கூறியதாவது,

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் முடிவு செய்யப்பட்ட ஒன்று.குடும்ப அரசியலை நடத்தி வரும் காங்கிரஸ் மற்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் பாஜக, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறது.மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

2013 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சபதம் ஒன்றை ஏற்றார்.அதாவது குடும்ப அரசியலை நடத்தி வரும் காங்கிரஸ் அற்ற பாரதத்தை உருவாக்குவோம் என கூறி சபதம் ஏற்றார்.அதில் 90 சதவீதம் நடந்து விட்டது. 543 இடங்களில் உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு 50 இடங்களுக்கு குறைவாகவே தற்பொழுது உள்ளது.தற்போது நடக்கப் போகும் 2024 ஆம் தேர்தலில் இந்த இடங்கள் கூட கிடைக்காமல் பூஜ்ஜியம் என்று வரப்போகிறது.

இவரின் வழிவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இதே போல 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று சபதம் ஏற்று உள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம், அரக்கனான குடும்ப அரசியலை நடத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டாயம் வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயமட்டோம் எனக் கூறியுள்ளார்.

அதற்கு அடித்தளமே இந்த பாராளுமன்ற தேர்தல் தான்.சனாதானத்தை அழிப்போம் என்று கூறும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கும் வரை இந்த கூட்டத்திற்கு ஓய்விருக்காது  என கூறினார்.

மேலும்,திமுக என்ற ஊழல் கட்சியை ஒழித்து 2024 ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழக்தில் பாஜக மாபெரும் வெற்றி பெரும்.பாஜகவின் வெற்றியை தடுக்க மெரினாவில் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களின் தகப்பனார் வந்தால் கூட தடுக்க முடியாது. ‘இது தேர்தல் போர் அல்ல.அட்டூழியம் செய்யும் அசுரர்களுக்கும்(திமுக) மக்களுக்கு ஊழியம் செய்யும் சூராக்களுக்கும்(பாஜக) இடையே நடக்க கூடிய போர்’ என ஆவேசமாக பேசினார்.