நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!!

0
86
#image_title

நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!!

நல்லெண்ணெயை பயன்படுத்தி நமக்கு பிடிக்கும் சளித் தொற்றை நாம் குணப்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் மேலும் நல்லெண்ணெயின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்;

 

* எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணெயை நாம் கட்டை விரலில் சிறிதளவு எடுத்து சிறு நாக்கை சுற்றி கடிகாரம் சுற்றும் திசையிலும் அதன் எதிர் திசையிலும் தேய்த்து விட வேண்டும். பிறகு தொண்டைக்குழியில் கட்டை விரலை உள்புறம் விட்டு மீண்டும் வெளிப்புறம் எடுக்க வேண்டும். இதை செய்யும் பொழுது கண்களை மூடிக் கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளும் பொழுது இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இவ்வாறு செய்வதால் தொண்டைக் குழியில் இருக்கும் கபத்தை இது வெளியேற்றி விடும். இதை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் செய்ய வேண்டும். அதிகமாக செய்தால் வாந்தி வரும் தன்மை ஏற்படும்.

 

* நல்லெண்ணெய்க்கு இதய நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. இதனை பயன்படுத்துவதால் இதயம் சம்பந்தமான எந்த நோய்களும் ஏற்படாது.

 

* நல்லெண்ணெயை பயன்படுத்துவதால் கண்களுக்கு நல்ல ஒளிச் சக்தியை கொடுக்கின்றது.

 

* நல்லெண்ணையை பயன்படுத்துவதால் குடலில் ஒட்டி இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேறி விடுகின்றது.

 

* பெண்கள் நல்லெண்ணெயை பயன்படுத்துவதால் அவர்களுக்கு ஏற்படும் கர்பப்பை பிரச்சனைகளையும் இது சரி செய்கின்றது.

 

* இந்த நல்லெண்ணெய் ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரித்து கொடுக்கும்.

 

* நல்லெண்ணெயை பயன்படுத்துவதால் செரிமானக் கோளாறுகள் சரியாகும்.

 

* நல்லெண்ணெயை பயன்படுத்துவதால் நரம்புகளை பலப்படுத்தி நரம்புகளுக்கு தேவையான சக்தியை கொடுக்கின்றது.

 

* நல்லெண்ணெய் சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு பிரசவம் சுகப் பிரசவமாக நடக்கும்.