நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

0
84
#image_title

நான் சொல்லும் பட்டியலை நிறைவேற்றி காட்டுவீர்களா? மோடிக்கு சவால்விட்ட ஸ்டாலின்!!

பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு வருவதுபோல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வட்டமடிப்பதாக, முதலமைச்சருமான, திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதோடு இந்த பட்டியலையும் நிறைவேற்றுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்

கல்விக்கடன்கள் ரத்து

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்

செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

அமலாக்கத்துறை – வருமான வரித்துறை – சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன் *

வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்

கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்

சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன் – என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா? இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் ‘Made in BJP’ வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டுக்கென 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாமல், அறிவிக்கப்பட்ட ஒரே சிறப்புத்திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டித் தராமல், எந்த முகத்துடன் பிரதமர் மோடி வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டுக்கு வருகிறார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேர்தல் சீசனில் மட்டும் வந்துபோக இது என்ன பறவைகள் சரணாலயமா? என்றும், தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பிய அவர், இத்தகைய போலிகள் வீழ்ந்து, தமிழ்நாட்டை உண்மையாக மதிக்கும் பிரதமர் டெல்லியில் அமர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Preethi