சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

0
153

சீனா மெதுவாக இயல்பு நிலைக்கு வந்த நிலையில் சீனத் தலைநகரான  பீஜிங் அருகே  கொரோனா வைரஸ் கடந்த மாதம்  மீண்டும் பரவத் துவங்கியது. பீஜிங்கில் உள்ள  இறைச்சி சந்தையில் பணிபுரிவரிகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று  பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீனாவின்  மற்றும் ஒரு மாகாணமான சின்ஜியாங்கில் ஒரே நாளில் 112 பேருக்குக் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.

சின்ஜியாங்கின் தலைநகரில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000-க்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் கட்டுப்பாடுகள்  தீவீரமாக்கப்பட்டுள்ளன. வெளியே செல்ல வேண்டும் என்றால் மருந்துவச் சான்றிதழை அளிக்க வேண்டும் என சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Previous articleபக்ரீத் கொண்டாட்டம் ஏன்? பக்ரீத் என்பது தியாகத் திருநாளா? உண்மையில் பக்ரீத் எதற்காக கொண்டாடப்படுகிறது?
Next articleசேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை