சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! 

0
158
Australian police shot and killed an Indian!!
Australian police shot and killed an Indian!!

சரியாக மூடப்படாத கதவு!  தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! 

லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி தொழிலாளிகளுடன் லாரி புறப்பட்டது. அந்த லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் வயது 28 என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். சென்று கொண்டிருந்த லாரியின் இடது பக்க கதவு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதனால் பிரேக் போடும்போது லாரியில் பயணம் செய்த பேரணாம்பட்டு டவுன் பூங்கா வீதியைச் சேர்ந்த நரேஷ்  வயது 27 என்ற தொழிலாளி தவறி கீழே விழுந்தார். 

அப்போது அவர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் லாரி டிரைவர் குமார் உடனே இறங்கி தப்பி ஓடி விட்டார். நரேஷை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குமாரை தேடி வருகின்றனர். சரியாக மூடப்படாத கதவினால் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.