தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

0
110

தினம் ஒரு செம்பருத்தி பூ! உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது!

செம்பருத்தி பூவை பச்சையாக சாப்பிடுவதில் உள்ள ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ பொதுவாக பெண்கள் தலைகளின் வைப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் இதில் உள்ள இலைகள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது அதனை என்னவென்று இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம்.

செம்பருத்தி பூ அதில் உள்ள மகரந்தத் தோலை நீக்கிவிட்டு அதன் பிறகு நீரில் நன்றாக தூய்மைப்படுத்தி தினசரி காலையில் பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அதில் உடல் சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்க மிகவும் உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புத் தன்மை அதிகரிப்பதன் காரணமாக இருதய அடைப்பு ஏற்படும் இதனை தடுக்க பச்சையாக செம்பருத்திப்பூவின் இதழ்களை சாப்பிடுவதால் இவ்வித பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும் உடலில் அதிகப்படியான பதட்டம் படபடப்பு மற்றும் ரத்த அடைப்பு போன்றவற்றிலிருந்து குணமாக உதவுகிறது.

நம் உடல் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக வாய்ப்புண் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இதனை தடுக்க செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாக காய வைத்து அதனை பொடி செய்து தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கப் பாலில் கலந்து குடித்து வருவதன் காரணமாக இவ்வித பிரச்சனைகள் முற்றிலும் குணமாக உதவும்.

நம் தோல் பகுதியில் உள்ள ஈரப்பதம் குறைவதன் காரணமாக தோலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. இதனை குணப்படுத்த பச்சையாக செம்பருத்தி இதழ்களை உண்பதன் காரணமாக தோலில் உள்ள இரப்பதத்தை அதிகரிக்கும். இவ்வித பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.

author avatar
Parthipan K