குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக வேண்டுமா? ஒரு வெற்றிலை போதும்!

0
252

குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாக வேண்டுமா? ஒரு வெற்றிலை போதும்!

குதிகால் வலி வீக்கம், பாத வலி எரிச்சல் சரியாக இதனை செய்தால் போதும்.பொதுவாக குதிகால் வலி ஏற்படுவதற்கு காரணம் அதிக உடல் பருமம், கடினமான வேலைகள் மற்றும் உடலில் கால்சியம் சத்து குறைவுதான்.

குதிகால் வலி ஏற்படும் இதனை எவ்வித செலவுமின்றி குணப்படுத்தும் செய்முறைகளை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

இதனை வெற்றிலை வைத்தியம் என கூறலாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் குதிகால் வலி, வீக்கம், பாத வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.

ஒரு வெற்றிலை சிறிதளவு கசகசா மற்றும் சிறிதளவு வெந்தயம், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாய்ப்பகுதியில் வைத்து சிறிது நேரம் மெல்ல வேண்டும் முதலில் வரக்கூடிய உமிழ் நீரை கீழே துப்பி விட வேண்டும். அதன் பிறகு வரக்கூடிய சாற்றினை விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் காரணமாக குதிகால் வலி, குதிகால் எரிச்சல், பாத வெடிப்பு ஆகியவை வராமல் தடுக்க உதவும்.

 

author avatar
Parthipan K