சூழ்நிலை மாறினால் அவ்ளோதான்! பிறந்தநாள் விழாவில் மு.க.அழகிரி பேச்சு..!!

0
81

சூழ்நிலை மாறினால் அவ்ளோதான்! பிறந்தநாள் விழாவில் மு.க.அழகிரி பேச்சு..!!

முக அழகிரியின் 69 ஆம் பிறந்தநாளை இன்று தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஒரு திருமண விழாவில் கலந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதில் அவரது நெருங்கிய நண்பர்களும், உறவினர், அரசியல் கட்சி நபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய அழகிரி, தற்போது இருக்கும் சூழ்நிலை எப்போது மாறும் எனத் தெரியாது என்றும், நிலைமை மாறினால் அவ்வளவுதான் என்று யாரையோ எச்சரிப்பது போல ஆதரவாளர்கள் நடுவே பேசினார். அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கூட என்னிடம் பேசுகிறார்கள் என்று வெளிப்படையாக கூறினார். என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் நான் நினைத்ததை முடிப்பவன் என்று பேசினார். அவரது பேச்சில் ஒருவித வருத்தமும் இருப்பது தெரிந்தது. ஒருவேளை திமுக செயல்தலைவர் ஸ்டாலினையோ அல்லது திமுக முதன்மை நிர்வாகிகளை மறைமுகமாக எச்சரிக்கிறாரா..? அல்லது வேறு யாரை எச்சரிக்கிறார் என்று தெரியவில்லை.

அரசியலில் அடிக்கடி திமுகவை விமர்சித்து வந்த அழகிரி, நீண்ட நாட்களாக தனது அரசியல் செயல்பாடுகளை புறக்கணித்து வந்தார். சென்ற ஆண்டு தனது அரசியல் ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணியை நடத்தி கலைஞரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். பிறந்த நாளில் எச்சரிக்கை செய்யும் அளவிற்கு, யார் என்ன செய்தார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. வருங்கால அரசியல் சூழலில் சில உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.அழகிரியின் பிறந்த நாளுக்கு பலரவேறுஅரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

author avatar
Jayachandiran