ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

0
122

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது.

இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சியில் நீர்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி12, போன்றவைகள் இருக்கின்றது. கால்சியம் ,பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்றவைகள் இந்த இஞ்சியில் இருக்கின்றது.

முதலில் இஞ்சியை தோலுடன் சேர்த்து நன்கு சீவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் முற்றிலும் குணமாகும்.

அப்பொழுதும் தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால் இஞ்சியை நன்கு அரைத்து அந்த விழுதினை தலையில் பத்து போட வேண்டும். தலைவலி ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து கொண்டால் கண் பிரச்சனைகள் சரியாகும்.

 

author avatar
Parthipan K