வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

தாலிபான்கள், பல போராட்டங்களுக்கு பின்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், தற்போது வாழ்வாதாரம் கூட பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நாளிலிருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வருத்தம் … Read more

ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை- தமிழ்நாடு அரசு தகவல்!

ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை- தமிழ்நாடு அரசு தகவல்!

3வது ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சினை என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு என தமிழக அரசு கூறிய நிலையில், மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது. வேறு மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால், பணியாற்றுவதில் சிக்கல் … Read more

இந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!

இந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!

உத்திரபிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல அடுத்த மாதம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. ஆளும் பாஜகவிற்கு முக்கிய எதிர்க்கட்சியான, சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நமது உண்மையான எதிரி சீனா, பாகிஸ்தான் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக வாக்கு வங்கி அரசியலுக்காக பாகிஸ்தானை மட்டுமே குறி வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், … Read more

அசாமில் புதிய கட்டுப்பாடு – அசாம் அரசு அதிரடி!

அசாமில் புதிய கட்டுப்பாடு - அசாம் அரசு அதிரடி!

அசாமில், தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அசாம் அரசு குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அசாம் அரசு கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5902 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் 44 ஆயிரத்து 75 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், … Read more

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பசிபிக் கடல் பகுதிகளில் சீனா பல ஆக்கிரமிப்புகளை செய்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக அமெரிக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானமான யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம், தாங்கி போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. கப்பல் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் F35 C … Read more

அவதூறு வழக்கில் சிக்கிய கேரள முன்னாள் முதலமைச்சர்!

அவதூறு வழக்கில் சிக்கிய கேரள முன்னாள் முதலமைச்சர்!

கேரளாவின், முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் 10 லட்சம் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் சோலார் பேனல் என்றழைக்கப்படும் சூரிய ஒளி மின் தகடு பெற்றுத் தருவதாக கூறி, மோசடி செய்ததற்காக சரிதா நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போதைய முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கூறி அவதூறாக பேசியிருந்தார். இதன் காரணமாக 2014 ஆம் … Read more

ராஜீவ் கொலை வழக்கு; நளினிக்கு 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ராஜீவ் கொலை வழக்கு; நளினிக்கு 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினிக்கு, 30 நாள் பரோல் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு, ஒரு மாத காலம் பரோல் அளிக்க வேண்டும் என அவருடைய தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருடைய தாயார் பத்மா உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு … Read more

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ;42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ;42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் இந்த கடுமையான பனிப் பொழிவின் காரணமாக, ஏராளமான வீடுகள் இடிந்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. பனிப் பொழிவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக அவர்கள் கடுமையாக போராடி வருவதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகம் … Read more

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா! நடைபெறுமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள், 175 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது. அதேபோல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்த நிலையில், 875 … Read more

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மகாராஷ்டிரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளும், 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில், கொரனோ பரவல் அதிகரித்த போது அதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மும்பை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில், கொரனோ பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திங்கள் முதல் பள்ளிகள் … Read more