பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?

0
209
Bike and truck collision accident! Two college students killed, one worried?
Bike and truck collision accident! Two college students killed, one worried?

பைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?

 கோவை மாவட்டம் விஷ்னு தில்லைநகர் இடையர்வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் மற்றும்  தேவகோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்வரன். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம் ஸ்ரீ நேருமஹா வித்தியாலயா கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நண்பர் உடன் மூவரும்  கோவை ஈச்சனாரி பகுதியில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே அந்தபகுதியில் டிப்பர் லாரி ஓன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த டிப்பர் லாரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் பலியான இரண்டு மாணவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K