ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

ஜார்க்கண்டில் ஆட்சியை இழக்கிறது பாஜக?

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு வன்முறையுடன்பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு நிலையில். வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக … Read more

“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” – மாணவி ரபிஹாஅதிரடி

“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” - மாணவி ரபிஹாஅதிரடி

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்., துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கும்  பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, … Read more

மீண்டும் ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் பலியான பரிதாபம்?

மீண்டும் ஏற்பட்ட தீ விபத்து 9 பேர் பலியான பரிதாபம்?

டெல்லியின் கிராரி என்ற பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் உள்ளது இதில் மொத்தம் 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் எழுவதற்குள் தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை 3 மணி நேரத்துக்கும் … Read more

உதவி இயக்குனரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை!

உதவி இயக்குனரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை!

உதவி இயக்குனரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை! தமிழில் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களிலும், மலையாளத்தில் ரெட் சில்லீஸ், அயாள் நிஜனல்ல போன்ற படங்களிலும் நடித்தவர் நடிகை மிருதுளா ரவி. என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகை மிருதுளா முரளி. இவர் இந்தியிலும் ரத்தேஷ் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிகை மிருதுளா ரவியும், உதவி இயக்குனர் நிதின் விஜய்யும் கடந்த … Read more

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்? திருமணமான 20 நாட்களில், கணவரை கைவிட்டு காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும், பரசேரி என்ற பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவருக்கும், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.  புதுமண தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர், திருமண … Read more

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து

இது மாதிரி நபர்களை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்: பாடகி சின்மயி அதிரடி கருத்து கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சமீபத்தில் மீடூ குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் ஒய்ஜி மகேந்திரன் குறித்து கூறிய ஒரு கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒரு ஒய்ஜி மகேந்திரன் அவர்கள் மாணவர்களின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இளம்பெண்கள் சைட் அடிக்க வேண்டும் … Read more

“உலகம் ஒரு குடும்பம் ” – மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

"உலகம் ஒரு குடும்பம் " - மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

உலகளவில் பலவகையான அழகு போட்டிகள் நடப்பதுண்டு. உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளை தாண்டியும் பல வகையில் அழகு போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அழகி போட்டிதான்  மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி. இது  உலகின் மிகப் பழமையான போட்டியாகும். கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இந்நிலையில்  சமீபத்தில் நடந்த இந்த ஆண்டிற்கான மிஸ் டீன் சர்வதேச போட்டியில் பங்கேற்ற இந்தியாவின்  வதோதராவைச் சேர்ந்த பதினாறு வயதான … Read more

பதினைந்தாவது ஆண்டில் மஹிந்தர் சிங் டோனி “

பதினைந்தாவது ஆண்டில் மஹிந்தர் சிங் டோனி "

MSD, கிரிக்கெட் சமூகத்தின் எல்லோரும் உச்சரிக்கும் தவிர்க்க முடியாத பெயர். சில மாதங்களாக இந்த பெயர் இந்திய அணி ஆடும் லெவேனில் இல்லாமல் இருப்பது இவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே ஏனோ ஏமாற்றம் தான். அப்படி இந்தியாவுக்கு என்ன செய்து விட்டார், சென்னை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த “ தல தோனி”. மகேந்தர் சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெறுகிறது. பங்களாதேஷ்க்கு எதிராக 2004 … Read more

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” – இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” - இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் … Read more

சர்ச்சையில் சசி தரூர் !!!

சர்ச்சையில் சசி தரூர் !!!

சசி தரூர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். `தி கிரேட் இந்தியன் நாவல்’ என்கிற புத்தகத்தை மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் விடுதலைக்குப் பின் 30 ஆண்டுகளை முன்வைக்கும் நையாண்டி கற்பனைப் படைப்பாக எழுதியிருந்தார். 1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சசி தரூர், இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியிருப்பதாகக் கூறி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு … Read more