“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

0
59
#image_title

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது.

இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற ஹேஷ்டாக் நேற்று மாலையிலிருந்து கேரளாவில் ட்ரண்டாகி வருகிறது.இந்த ஹேஷ்டாக் எதிர்விளைவு லியோ படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்மறையான ஹேஷ்டாக் ட்ரண்டிங்கின் காரணம் தெரியாமல் படக்குழுவினர் குழம்பி வந்த நிலையில் .தற்போது இதன் காரணம் தெரியவந்துள்ளது அக்காரணம் என்னவெனில் மாலிவுட் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் “மோகன்லால்”அவர்களை தமிழகத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவதூறாக பேசியதாகவும் மற்றும் அவரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ததாகவும் தெரியவருகிறது.

இதனால் கோபமுற்ற மோகன்லால் ரசிகர்கள் இந்த ஹேஷ்டாக்கை ட்ரண்டாக்கி வருகின்றனர்.
இதுபோன்று மற்றொரு விஷயமும் கேரள விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.அது என்னவெனில்”லியோ” திரைப்பட போஸ்டர் கடந்த 4 நாட்களாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு மொழிகளில் மட்டும் வெளியாகியுள்ளது.ஆனால் மலையாளத்தில்”லியோ”திரைப்பட போஸ்டரை படக்குழு வெளியிடாததின் காரணமாக மாலிவுட் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுவும்”லியோ” திரைப்படத்திற்கு எதிராக ரசிகர்கள் ஹேஷ்டாக்கை ட்ரண்டாக்க காரணம் எனவும் தெரியவருகிறது. ‘
இதுதான் கேரள ரசிகர்களின் எதிர்ப்புக்கு காரணம் எனத்தெரிந்ததும்”லியோ” படக்குழுவினர்.கேரள விஜய் ரசிகர்களுக்கு கூடிய விரைவில் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளனர்.

author avatar
Preethi