#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!

0
196
#Breaking: Ban on belt change - High Court's call for action!!
#Breaking: Ban on belt change - High Court's call for action!!

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!

தமிழகத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மேய்க்கால் நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசானது உயர்நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும்.

அதேபோல இந்த மேய்க்கால் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கும் பட்டா வழங்குவதாக தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றமோ இவை அனைத்திற்கும் தடை விதித்தது, தற்பொழுது மீண்டும் மேய்க்கால் நிலத்தில் மக்கள் நல திட்டங்களை ஆரம்பிப்பதாகவும் அதற்கு பட்டா மாறுதல் செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஓர் நபர்,மேய்க்கால் நிலத்தில் அரசானது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பட்டா மாறுதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கானது இன்று வழக்கறிஞர் சுந்தரம் மற்றும் ஆதிகேசவலூர் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.

இதில் தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், மேய்க்கால் நிலத்திற்கு ஏற்ப மாற்று நிலம் அமைத்துதான் பட்டா மாறுதல் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையொட்டி நீதிபதிகள் கூறியதாவது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு ஏற்றவாறு மாற்று நிலம் அமைத்தால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,அதன்பிறகே பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.