கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?

0
60

கொரோனா தொற்று நோயின் கடைசி நாளை தனது ஜோசியத்தின் மூலம் கணித்த சிறுவனின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி பல லட்சம் மக்களை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின், பிரிட்டன், வடகொரியா, இந்தியா போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்த வைரஸ் தொற்று குறித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வசிக்கும் அதிசய சிறுவன் தனது ஜோதிட கணிப்பின் மூலம் கணித்து கூறியுள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் வருகிற மே மாதம் இறுதி நாட்களில் அழிய தொடங்கும் என்று யூடியூப் இணையத்தில் கூறியுள்ளார். அதாவது, அடுத்த மாத இறுதிக்குள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும், இதன் மூலம் அந்த நோய் படிப்படியாக அழியும் என்றும் கணித்து கூறியுள்ளார்.

மேலும் அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் வைரஸ் தாக்குதல் குறைந்து மற்ற நாடுகளுக்கு இந்தியா எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பானது இந்த ஆண்டின் இறுதியில் இருந்து படிப்படியாக மாறி அடுத்த ஆண்டின் இறுதி கட்டத்தில் சரியாகும் என்று தெரிவித்துள்ளார்.

சிறுவன் அபிக்யாவின் கணிப்புகள் நூறு சதவீதம் உண்மை இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இவரது கடந்தகால கணிப்புகள் ஓரளவு உண்மைதான் என்றும் நம்பப்படுகிறது. இதனால் அவரது பேச்சு உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க : டாக்டர் வில்சனை விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

மேலும் படிக்க : ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!

author avatar
Jayachandiran