தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!!

0
198
#image_title

தமிழக மக்களை நட்டாற்றில் விட்ட திமுக – அண்ணாமலை காட்டம்!!

இன்றைய பட்ஜெட் தாக்கல் என்பது மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை திமுக ஏமாற்றுவதற்கான அறிவிப்புகளே என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார் அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது என திருநங்கைகளுக்கான கல்லூரி செலவைஅரசே ஏற்பது , பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது திமுக.

ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மத்திய அரசின் நலத் திட்டங்களுக்குத் தங்கள் பெயரை சூட்டிக் கொள்வது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே, மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா திமுக? என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை. மாறாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல வீண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, திமுக அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Savitha